Pages

Sunday, November 6, 2011

மீண்டும் தொடர்கிறான் யாழ் மன்னன் “சங்கிலி”


தலைப்பை பார்த்ததும், ஒரு வருடத்துக்கு முன்பிருந்தே வரோவை பதிவுலகில் பின் தொடர்பவர்கள் “அட! மீள் பதிவா? மறுபடியும் முதல்ல இருந்தா?” என வாயில் விரலை வைக்காதீர்கள்.

யாழ்ப்பாணத்தை ஆண்ட கடைசி மன்னன் “சங்கிலியன்” என்பது வரலாறு அறிந்த தமிழர்கள் எல்லோருக்கும் நன்றாகவே தெரியும். அவ்வரசனின் கம்பீரமான சிலை நல்லூர் ஆலயத்துக்கு வடக்குப் பக்கமாக அமைந்துள்ள வீதியில் வைக்கப்பட்டுள்ளது. (அண்மையில் கூட சிலை மாற்ற சர்ச்சைக்கு உள்ளாகியது)

சங்கிலியனின் வரலாற்றை நான் அறிந்த ஆதாரங்களுடன் கற்பனைகளை புகுத்தி ஒரு ஜனரஞ்சகமான வரலாற்று கதையாக கடந்த 2007ஆம் ஆண்டு எழுதியிருந்தேன். அதனை கடந்த வருடம் என் அகசியம் வலையில் ஏற்றத் தொடங்கினேன். சில காலங்களின் பின்னர் அத் தொடரை மட்டும் தனியாக ஒரு வலையில் ஏற்றினேன். முப்பது அத்தியாயம் வரை தரவேற்றியாகிவிட்டது. ஆனால் முடிக்கவில்லை.

மீண்டும் சரியாக ஒரு வருடத்தின் பின்னர் சங்கிலியன் வலையை தூசு தட்டியிருக்கிறேன். இத்தொடர் “க்ளைமாக்ஸ்” இல் தடைப்பட்டதற்கு காரணம் என் “லண்டன்” பயணம். இங்கு வரும்போது கதை எழுதிய அப்பியாசப்புத்தகத்தை இலங்கையிலேயே விட்டு விட்டு வந்துவிட்டேன். தற்போது அதை மீளப்பெற்றுவிட்டேன். அதனால் எஞ்சிய முக்கிய கடைசி இரண்டு பாகங்களையும் தரவேற்றவுள்ளேன்.

இதுவரை சங்கிலியன் தொடரை வாசித்த என் நண்பர்களும், இனி வாசிக்கப்போகும் நண்பர்களும் “சங்கிலியன் வலைத்தளத்தை” ஆரம்பத்திலிருந்து படித்தால் நல்லது.

இந்த தொடர் பற்றிய என் விளக்கங்களை சரிவர புரிந்து கொள்வதற்கு நிச்சயம் இதன் முன்னுரையைப் படிக்கவும்.

தொடர்ந்தும் என் முயற்சிக்கான உங்கள் பேராதரவை அன்புடன் எதிர்பார்க்கிறேன்.

0 comments:

Post a Comment